tamilnadu

img

பழிவாங்கல் நடவடிக்கையை கைவிடக் கோரி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 31 – அரசு ஊழியர்கள் மீது தொடுக் கப்படும் பழிவாங்கல் நடவ டிக்கையை கைவிடக்கோரி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் அமைப்பின் நிர்வாகி கள் உள்ளிட்ட முன்னணி ஊழியர் கள் மீது போடப்பட்ட பழிவாங்கல் வழக்குகளைக் கைவிட வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்டச் செயலாளர் ஜோசப், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கனகராஜா, பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் விநா யகமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப் பாளரும், அரசு ஊழியர் சங்கத் தலை வருமான இரா.பாஸ்கரன் உட்பட திர ளானோர் பங்கேற்று கண்டன முழக் கங்களை எழுப்பினர்.