சாதிய ரீதியாகப் பிரிந்து போராடுவது சரியல்ல வழக்கறிஞர்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்
சிபிஎம் மாநில செயற்குழு வேண்டுகோள்!
சென்னை, அக். 17 - வழக்கறிஞர்களின் ஒற்றுமைக்கு குந்த கம் விளைவிக்கும் சாதிய ரீதியான போராட் டங்களை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், அக்டோபர் 7 அன்று நடைபெற்ற விரும்பத் தகாத சம்பவத்தையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் சாதிய ரீதியாகப் பிரிந்து ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கவலையை வெளிப்படுத்துகிறது. நீதித்துறையின் மீது இந்துத்துவ சக்தி கள் தாக்குதல் நடத்துவதையும், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப் பதை எதிர்த்தும் வழக்கறிஞர்கள் ஒன்று பட்டு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வழக்கறிஞர் களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில், நிகழ்வுகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்களின் பாதுகாப்புக் கான அமைப்பாகும். சம்பந்தப்பட்ட வழக் கறிஞர் நடந்து கொண்டதும், பார் கவுன்சில் அலுவலகத்தில் வழக்கறிஞர் மீது தாக்கு தல் நடந்திருப்பதும் முற்றிலும் ஏற்புடைய தல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. நடைபெற்ற சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார் கவுன் சில் விசாரணைக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப் பட்டு உள்ளது.