இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் தொழில் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி யடைய தொடங்கின. அதே நேரத்தில் தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகளும், உழைப்பு சுரண்டலும் தாங்க முடி யாத அளவுக்கு சென்றன.மும்பை, கொல்கத்தா பகுதிகளில் சணல், பருத்தி, பஞ்சாலைகளில் பணி புரிந்த தொழிலாளர்கள் 1890களில் தொழிற்சங்கங்களை அமைத்த னர்.
சங்கம் சேரும் உரிமை, கூட்டுப்பேர உரிமை நிலைநாட்டிய பெருமைக்கு சொந்தக்காரர்கள் சென்னை தொழிலாளர்கள். ஆம்! அத்தகைய உரிமைகளை பெற அந்த தொழிலாளர்களின் போராட்ட ங்களும், வேலைநீக்கம், ஊதியம் மறுப்பு, உணவுக்கான நேரம் குறைப்பு என பலவிதமான பழி வாங்குதல் நடவடிக்கைகளை துணி வுடன் எதிர்கொள்ள அமைப்பு ரீதியாக திரண்ட தொழிலாளர் களுக்கு சங்கத்தின் தேவையை தலைவர்கள் உணர்த்தினர்.
சுதந்திரப் போராட்டத்தில், சமூக- ஆன்மிக பணிகளில் ஈடுபாடு கொண்ட பி.பி.வாடியா, அன்னி பெசன்ட் அம்மையார், திரு.வி.கல்யாணசுந்தரனார், செல்வபதி செட்டியார், ராமானுஜ நாயுடு, சர்க்கரை செட்டியார், ம.சிங்கார வேலர் போன்ற மாமனிதர்களின் சீரிய முயற்சியால் உருவானது தான் மெட்ராஸ் லேபர் யூனியன் (எம்எல்யூ). 27.4.1918ல் துவங்கப் பட்ட இச் சங்கமே இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் தொழிற் சங்கமாகும்.
வடசென்னை பட்டாளம் ஸ்டிரான்ஸ் சாலையில் உள்ள எம்எல்யூ கட்டிடம் பின்னி ஆலை மூடப்பட்ட பின்னரும் சில ஆண்டு கள் செயல்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக கட்டிடம் சிதிலமடைய தொடங்கியதால் ஆட்களின் நட மாட்டம் குறைந்தது. ஒரு நூற்றாண்டு தொழிலாளர் உரி மைக்கான போராட்ட வரலாற்றை இந்த கட்டிடம் சுமந்து நிற்கிறது. தற்போது அந்த அலுவலகம் பரா மரிப்பின்றி எந்நேரத்திலும் விழுந்து நொறுங்கும் நிலையில் உள்ளது.
இந்திய தொழிலாளர் வர்க்க போராட்டங்களுக்கு அடித்தள மாக இருந்த மெட்ராஸ் லேபர் யூனி யன் அலுவலகத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கட்டிடத்தை பாது காப்பது அவசியமாகும். சென்னை யின் தொழிற்சங்க வரலாற்றை வருங்கால தலைமுறை அறிந்து கொள்ள இந்த கட்டிடத்தை வர லாற்று சின்னமாக பராமரிக்க தமிழகஅரசு முன்வரவேண்டும். கட்டிடம்முழுமையாக சேத மடைந்துள்ளதால் அதே வடிவத் தில் புதிய கட்டிடம் கட்டி அதில் சென்னையின் தொழிற்சங்க வர லாறு குறித்த அருங்காட்சி யகத்தை ஏற்படுத்தலாம்.
சென்னை சிந்தாதரிப்பேட்டை யில் உள்ள நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என பெயர்மாற்றம் செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணா நிதி. அவருடைய வழியில் ஆட்சி செய்யும் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகிறார்கள். அதுவே நூற் றாண்டு காணும் மெட்ராஸ் லேபர் யூனியனுக்கு பெருமை சேர்க்கும்.