சென்னை,செப்.26- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள் ளார்.
இந்திய தேசிய உணவக சங்கத்தின் சார்பில் ‘இந்திய உணவகங்களின் உச்சி மாநாடு - 2024’ சென்னை எம்ஆர்சி நகரில் செப்டம்பர் 26 அன்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1,200 உணவகங்களின் உரிமையாளர்கள், 100 சமையல் கலை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட உணவகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, உணவு அரங்குகளை பார்வையிட்டர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாது காப்புத் துறை கூடுதல் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 60 முன்னணி உணவகங்களின் தரப்பில் இருந்து குழு விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் ரேசன் கடைகளில் செப்டம்பர் மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுந்தம் பருப்பையும், கோதுமை மாவையும் நிதி நிலைக்கு ஏற்ப மீண்டும் வழங்கவும் பரிசீலித்து வருகிறோம். பயோமெட்ரிக்கிற்கு பதிலாக கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருட்களை பெறும் முறை 28 ஆயிரம் முழு நேர கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது மீதமுள்ள கடைகளில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரி வித்தார்.
தமிழகத்தில் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித் திருந்தனர். அதில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்ப்பு பணி முடிவடைந்து அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பணி முடிவடைந்ததும் தகுதியான நபர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.