tamilnadu

img

தமிழ்நாடு, கேரளத்தின் சிறந்த நிர்வாகத்திற்கு இதுதான் பரிசா?

நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டு கேரளமும் தமிழ்நாடும், திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு பீகாரும் உத்தரப்பிரதேசமும். சொல்வது எதிர்கட்சிகள் அல்ல… அரசின் பொருளாதார ஆய்வறிக்கை. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் 1 சதவீதத்தை வைத்துள்ள தமிழ்நாடு 100 நாள் வேலைத் திட்டத்தில் தேசம் முழுவதற்குமான ஒட்டு மொத்த நிதியில் 15 % ஐ பெற்று வேலை தந்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் 0.01% இருக்கிற கேரளா 4 % நூறு நாள் வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 20% இருக்கிற பீகார் 6 % மட்டுமே நூறு நாள் வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 25% இருக்கிற உத்தரப் பிரதேசம் 11 % மட்டுமே நூறு நாள் வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி உள்ளது.  இந்த விமர்சனத்தை எதிர்க் கட்சிகள் வைக்கவில்லை. அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் நிர்வாகத் திறனில் சிறப்பாக உள்ள தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்ஜெட் தந்துள்ள பரிசுகள் என்ன? பாராமுகம்; பாரபட்சம் தான் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.