எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம் என்று பேசிஇருக்கிறார். நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான 370வது சிறப்பு பிரிவை ரத்து செய்தது எவ்வளவு ஆபத்தானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதுவரை அதிமுகதலைவர்கள் இது பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புவெளிவந்துள்ளது. இது தொடர்பாகவும் அவர்கள் வாய் திறக்கவில்லை. பிறகு எப்படி சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம், நேசமாக இருக்கிறோம்என்று உங்களால் சொல்ல முடியும்? இப்போது கூட, நாடாளுமன்றத்தில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்றும் கூட இதுபற்றி வாய்திறந்து அதிமுக பேசவில்லை. நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்; தமிழ்நாட்டின் எம்பிகள் போல சஸ்பெண்ட் ஆக வேண்டாம். ஆனால் இது குறித்து ஒரு கேள்வி கூடஉங்களால் எழுப்ப முடியவில்லையே, ஏன்? நாங்கள் பாஜகவுடன் இல்லை; கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன அர்த்தம்?
திண்டுக்கல்லில் அளித்த பேட்டியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்