tamilnadu

img

துணை மின் நிலைய பராமரிப்பு தனியாருக்கா? தமிழகம் முழுவதும் மின் தொழிலாளர்கள் ஆவேசம்

சென்னை:
துணை மின்நிலையங்களை பராமரிக்க தனியாரை அனுமதிக்கக் கூடாது, மின் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்காதே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவல கங்கள் முன்பு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை
அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் தொமுச பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில செயலாளர் கே.ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.சுப்பிரமணியம் (ஓய்வுபெற்றோர் நல அமைப்பு), அருட்செல்வம் (பொறியாளர் சங்கம்), எம்.தனலட்சுமி (உழைக்கும் பெண்கள்), சேவியர் (ஐ.என்.டி.யு.சி), கே.சந்திரசேகர் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), கே.செல்வராஜ் (ஜனதா தொழிற்சங்கம்), எம்.தனசேகர் (தொழிலாளர் சம்மேளனம்), பழனி, எம்.சுப்பிரமணி, ரவிச்சந்திரன், பக்தவச்சலம், சம்பத்குமார் உள்ளிட்ட 18 அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர்.