tamilnadu

img

பஞ்சாயத்துத் தலைவரானால் படுகொலையா?

இந்தியாவில் அமல்படுத்தப்படும் நாடாளுமன்ற ஜனநாயகமானது ஏராளமான பணப்புழக்கம், மத உணர்வு இவற்றோடு சாதிய உணர்வையும் தட்டி யெழுப்பக் கூடிய தேர்தல் முறையை அடிப் படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு நடைமுறையில் உள்ள தேர்தல் முறை யானது சாதிகளை கடந்து சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு பதிலாக வேட்பாளர் தேர்வு, வாக்கு சேகரிப்பு போன்றவை சாதிய உணர்வுகளை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்திய ஆளும் வர்க்கங்கள் சிபிஐ(எம்) வலியுறுத்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை வேண்டுமென்றே ஒப்புக் கொள்ள மறுக்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அமல் படுத்தினால் மக்கள் அரசியல் கட்சிகளுக்குத் தான் வாக்களிக்க முடியுமே தவிர தனிநபர் களுக்கு அல்ல. இத்தகைய தேர்தல் முறை யானது சாதி, மத உணர்வுகளையும் பணப் புழக்கத்தையும் பெருமளவு கட்டுப்படுத்த வும் ஒரு கட்டத்தில் உறுதியான நடவடிக் கைகளின் மூலம் அதனை முற்றிலுமாக போக்கவும் இயலும். ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக திரளும் மக்களை பிளவுபடுத்த சாதி, மத உணர்வுகள் பெருமளவு உதவும் என்பதால் அவற்றை கைவிட ஆளும் வர்க்கங்கள் ஒருபோதும் தயாராக இல்லை. மாறாக, பலமான மக்கள் இயக்கங்கள் மூலமே தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏணிப்படி வரிசையிலான இந்திய சாதிய அமைப்பு கடும் ஒடுக்குமுறைகளைக் கொண்டதாகும். இதில் அடித்தட்டு மக்களாக தலித் மக்கள் இருக்கின்றனர். சாதிய சக்திகள் இவர்களது ஜனநாயக உரிமைகளையும் ஏன் மனித உரிமைகளையும் கூட அப்  பட்டமாக பறிக்க முயல்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தலித் மக்க ளின் அரசியல் அதிகாரத்தை மட்டுமல்ல, அவர்களின் பிரதிநிதித்துவ உரிமையையும் கூட பறிக்க முயல்கின்றனர்.

இந்நோக்கத்தோடு தான் தலித் மக்க ளின் வாக்குரிமையை பறிக்க சாதிய சக்திகள் முயல்கின்றன. இம்மக்களின் நலன்களை யும், உரிமைகளையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய போர்க்குணமிக்க தலித் பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுவதை தடுக்க சாதிய சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகள் கடுமையானவை. இதற்கான ஏராளமான உதாரணங்களை இந்தியாவின் பரவலான மாநிலங்களிலும் காண முடியும். இடது சாரிகள் வலுவாக உள்ள கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களைத் தான் இதற்கு விதிவிலக்காக கூற முடியும். தமிழ்நாடு இந்த விதிவிலக்கு பட்டியலில் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி களிலிருந்து தலித் மக்களின் நலன்களை யும், உரிமைகளையும் பிரதிநிதித்துவப் படுத்தும் போர்க்குணமிக்க பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதை இன்றைய தேர்தல் முறை பெருமளவு தடுக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலேயே அது நடைமுறை சாத்தியமானது ஆகும் என்பதில் ஐயமில்லை.  ஆனால், உள்ளாட்சி தேர்தல்கள் என்பது ஒருவகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். பரவலான மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓரளவு அரசியல் பிரதிநிதித் துவம் கிடைக்கச் செய்யும் தேர்தல். எனவே, இதர பகுதியினரைப் போலவே தலித் மக்களும் இத்தகைய அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற விழைகின்றனர். தலித் மக்களிடையே விழிப்புணர்வும், எழுச்சியும் ஏற்பட்டு வரும் இக்காலத்தில் இப்போக்கு இயல்பாகவே வலுவடைந் துள்ளது. தலித் மக்களின் விருப்பத்திற்கும், உணர் விற்கும் எதிராக உள்ளாட்சி தேர்தலில் சாதிய சக்திகள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவதை காண முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களின் பிரதிநிதித்துவத்தை தடுக்க பல பகுதிகளில் அடாவடித்தனமான நடவடிக்கைகளில் சாதிய சக்திகள் இறங்கி வருகின்றன. தமிழ கத்தில் இதற்கான ஏராளமான உதாரணங் களை காட்ட முடியும். அதில், தமிழக மக்க ளையும், ஜனநாயக சக்திகளையும் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு தேர்தல்தான் மதுரை மாவட்டம் மேலவளவு தேர்தல். மேலவளவு ஊராட்சியை தலித் மக்க ளுக்கு ஒதுக்கக் கூடாது - சாதி இந்துக் களுக்குத்தான் ஒதுக்க வேண்டுமாம் - மீறி ஒதுக்கினால் தேர்தலையே நடத்த விட மாட்டோம் என கலவரம் நடத்தினர் சாதிய சக்திகள். இப்பிரச்சனையில் அன்றைய தமிழக அரசு துவக்கத்திலிருந்தே உறுதி யான நிலை எடுக்காமல் ஊசலாட்டமான நிலைபாடுகளையே மேற்கொண்டது. இதனால், சாதிய சக்திகளின் வெறிச்செயல் நாளுக்குநாள் அக்காலத்தில் அதிகமானது.

*    1994 ஆம் ஆண்டு மேலவளவு ஊராட்சி தேர்தல் அறி விக்கப்பட்டது. அனைத்துப் பிரிவினரையும் வாக்க ளிக்க வைக்க ஜனநாயகப் பூர்வமான உறுதியான முயற்சிகளை அன்றைய தமிழக அரசு செய்யவில்லை. எனவே, தேர்தல் நாளில் சாதிய சக்திகளின் தூண்டு தலால் சாதி இந்துக்கள் தேர்தலை முற்றிலுமாக புறக் கணிக்கப் போவதாக அறிவித்தனர். இதனால், தமிழக அரசு ஊராட்சி தேர்தலை தள்ளி வைத்துவிட்டது.

*    1995ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறையும் தேர்தல் முறையாக நடைபெற தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள வில்லை. எனவே, பரவலான மக்கள் வாக்களிக்க வர வில்லை. அதுமட்டுமல்ல, தேர்தல் நாளன்று மதியம் வாக்குப் பெட்டியையே சாதி வெறியர்கள் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டனர்.

*    1996ஆம் ஆண்டு தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி தோல்வி கண்டது. திமுக அதிகாரத்திற்கு வந்திருந்தது. இந்த ஆண்டு மேலவளவு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓரளவு தேர்தலுக்கான முன் தயாரிப்புகளும் செய்யப் பட்டிருந்தன. ஊராட்சித் தலைவர் மட்டுமல்ல, ஒன்றியக் கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் பதவிகளும் தலித்து களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. தலைவர் தேர்தலில் முருகேசன் என்பவர் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் நாளன்று சாதி இந்துக்கள் எவரும் வாக்களிக்க வர வில்லை. தலித் மக்கள் மட்டுமே வாக்களித்தனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

முருகேசன் வெற்றியை சாதிய சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முருகேசன் ஊராட்சித் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகளை சந்திப்பதும், மக்கள் பிரச்சனைகள் குறித்து மனுக்கள் தயாரித்து அதிகாரிகளிடம் அளிக்கும் நடவடிக்கைகளும் சாதிய சக்திகளை ஆத்திரமடையச் செய்தன. அவர்கள் பழிவாங்கும் செயலுக்காக காத்தி ருந்தனர். அவ்வப்போது முருகேசனுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன. முருகேசன் அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞருக்கு, தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வருவதாக வும் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து முருகேசனது அலுவலகத்தில் அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரு பிரிவு மக்களிடையே பகைமையும் மோதல் போக்கும் இருந்ததால் ஆறு மாத காலம் காவலர் படையை இக்கிரா மத்திற்கு அனுப்பி வைத்ததாக அப்போதைய காவல்துறை மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், விபரீதம் நிகழ்வதை தடுக்க முடியவில்லை. 30.06.1997இல் முருகேசனும், அவரது உதவியாளர்கள் பலரும் திண்டுக்கல் செல்லும் பேருந்தில் ஏறுகின்றனர். ஏறக்குறைய 20 பேர் கொண்ட கும்பல் அப்பேருந்தில் இருந்தது. முருகேசனின் நடவடிக்கைகளை இக்கும்பல் கண்காணித்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சமூக விரோதி களைக் கொண்ட அந்த கும்பல் பேருந்தை நிறுத்தி அதில் பயணம் செய்த இதர பயணிகளை மிரட்டி பேருந்திலிருந்து இறங்கும்படி செய்கின்றனர். பேருந்திலிருந்த முருகேசன் மற்றும் அவரது உதவியாளர்கள் 5 பேரை அரிவாளால் கடுமையாக தாக்குகின்றனர். அவர்களில் சிலர் பேருந்தி லிருந்து இறங்கி ஓடியபோதிலும் கூடவே விரட்டிச் சென்று தாக்கினர். ஆறு பேரும் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர். முருகேசன் தலை தனியாக வெட்டப்பட்டு அரு காமையில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டது.

முருகேசன் படுகொலை செய்யப்பட்டபோது அவருடைய வயது 35. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படியே முருகேசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இது தவறா? சாதிய சக்திகளின் கண்ணோட்டப்படியும் அவர்கள் கடைப்பிடிக்கும் மனுநீதி கோட்பாடுகளின்படியும் அது கடுமையான தவறுதானாம். அதனால்தான் அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் மரண தண்டனை விதித்து சாதிய சக்திகளும், சமூக விரோதி களும் படுகொலை செய்தன. தமிழகம் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் உள்ள ஜனநாயக, மனிதநேய சக்திகள் இச்சம்பவம் அறிந்து ஆவேசமும், ஆத்திரமும் அடைந்தன. வலுவான கண்டன இயக்கங்கள் தமிழகம் முழுவதும் நடந்தன. ஜூலை 4 ஆம் தேதி தமிழகம் தழுவிய பந்த் போராட் டத்தை நடத்துமாறு பல தலித் அமைப்புகள் அறைகூவல் விடுத்தன. இப்போராட்டத்திற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், இப்படுகொலையை கண்டித்தார். அரசியல் ரீதியாக தலித் மக்கள் பலமடை வதை விரும்பாத சாதி வெறியர்களின் நிலைபாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். இச்சம்பவம் அறிந்த உடன் சிபிஐ(எம்) மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டது. மாநிலம் முழுவதும் இப்படுகொலையை கண்டித்து சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பாக கண்டன இயக்கங்கள் வலுவாக நடத்தப்பட்டன.

படு கொலை நடந்த சில தினங்களுக்குள் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் வஹாப், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மதுரை மாநகர, புறநகர மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு குழுவாக மேலவளவு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதி அளித்தனர். அதன்படி, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா தலைமையில் ஒரு குழுவினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர். மக்களின் அச்சத்தை போக்கவும் அவர்களுக்கு நம்பிக்கையும், தைரிய மும் அளிக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக முதல்வரை வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் மேலவளவு படுகொலைக்கு எதிராக நடத்திய வலுவான கண்டன இயக்கங்கள் இந்திய நாடு முழுவதும் பிரதிபலித்தது. ஒரு மேலவளவு அல்ல. இந்திய நாடு முழுவதும் ஏராளமான மேலவளவுகள் உள்ளாட்சித் தேர்தல்களின் போதும், தலித் மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டும்போதும் வெளிப்படுகின்றன. சாதிய ஒடுக்குமுறை களை முடிவுக்கு கொண்டு வந்து தலித் மக்களின் ஜன நாயக, மனித உரிமைகளை எப்போது நிலைநாட்டுகிறோமோ அப்போதுதான் இந்தியாவில் ஜனநாயகத்தின் முழு அர்த்தமும் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.