tamilnadu

வரவு - செலவில் முறைகேடு; சட்டவிரோத கட்டுமானங்கள்

சென்னை, பிப். 24 - சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறுகிறதா என்பதை நேரில் ஆய்வும் செய்வோம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,  ஆருத்ரா  தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் 3 ஆண்டு வரவு, செலவு கணக்குகளை  தாக்கல் செய்ய தீட்சிதர்கள் சபைக்கு உத்தரவிட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் தங்க ளுக்குச் சொந்தமான கோயில் என்று கூறிக்கொண்டு நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இங்கு சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும் அதுபற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. மாநில நிபுணர் குழு அனுமதி பெறாமல், பழமையான கோவில் களில் எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்பது உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆனால், இந்த உத்தரவை மீறி, கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகா ரங்களில் 6 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது; எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பது தெரியவில்லை.

மேலும், கோயிலுக்குள்  இருந்த நூறு ஆண்டு  பழமையான மரங்கள் வெட்டப் பட்டுள்ளன. இவ்வாறு எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டுமா னங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்; அதேபோல கோயில் நிர்வாகம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான வருமான வரித்தாக்கலில் ரூ. 2 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்ததாக குறிப்பிட் டுள்ளனர்.

ஆனால், ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் ரூ. 6 லட்சம் கிடைத்துள்ளது; எனவே கோயில் வரவு - செலவு கணக்குகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண் டும்” என்று இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் ந்தார். புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன் பாக விசாரணைக்கு வந்தது. அற நிலையத்துறை சார்பில் சிறப்பு வழக்க றிஞர் அருண் நடராஜன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.  

இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கள், “புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க  நீதிமன்றம் அனுமதிக்காது. கோவில் கள் பக்தர்களுக்காக மட்டுமே; வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் இந்த நீதிமன்றம் தடுக்கும்; உரிய ஒப்பு தல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோயி லில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்” என்று நீதிபதிகள் எச்ச ரித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான வருமான வரித்  தாக்கலில் ரூ. 2 லட்சம் மட்டுமே வரு வாய் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் ரூ. 6 லட்சம் கிடைத்துள்ளது” என அறநிலையத்துறை சார்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்த, சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.