நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வெள்ளிக் கிழமையன்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு வருகை தந்தார். அப்போது அவர் செய்தி யாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதா வது:
சென்னை சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிர மாக பணி செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஒரு மாதச் சம்ப ளத்தை கொடுப்பதாக சொன் னால் அனைத்து எம்.எல்.ஏக்க ளும் கொடுத்து விடுவார்கள்.நானும் எனது ஒரு மாதச் சம்ப ளத்தை கொடுக்கிறேன். மக்களை யும் வெள்ள நிவாரணப் பணிக ளுக்கு உதவிக்கு அழைத்ததில் தவறில்லை.
அரசு வெள்ளத்தடுப்பு பணி களில் செய்த செயலை விமர்ச னம் செய்தால் அங்கு பணி செய் யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதைப் போல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால்தான் மழை யால் சேர்ந்த நீர்உடனடியாக வடிந் துள்ளதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.