சென்னை, மே 8 - தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்து 907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளி களில் இணையதள வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மொத்தமுள்ள 24 ஆயிரத்து 338 துவக்கப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 ஆயிரத்து 668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.
மேலும், அரசுப் பள்ளிகளில் 8 ஆயி ரத்து 180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ. 519 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரு கின்றன. 22 ஆயிரத்து 931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ. 455 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரு கின்றன. அரசுப் பள்ளிகளில் மாண வர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.