உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இணைந்து, உலக சுற்றுலா தினவிழா பேரணி நடைபெற்றது. அர்ஜூணன் தபசு அருகே மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், உள்பட பலர் கலந்துகொண்டனர்.