சென்னை, ஜூன்.13 2018-19ஆம் ஆண்டிற்கான எஸ்.ஒ.எஃப் ஒலிம்பியாட் தேர்வில் 30 நாடு களை சேர்ந்த 50000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 50 லட்சம் மாணவர்கள் பங்குபெற்ற னர். இந்த ஒலிம்பியாட்டில், சென்னையில் இருந்து 3.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை யை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சர்வதேச தரவரிசை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அறிவியல் ஒலிம்பியாட் தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் கவுரவ் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றார், மேலும் சின்மயா வித்யாலயா உயர்நிலை பள்ளியை சேர்ந்த மு.பார்கவி சர்வதேச கணித ஒலிம்பியாட் தேர்வில் சர்வதேச அளவில் 2வது இடம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவர் கவுரவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரூ.50ஆயிரம் ரொக்கப் பரிசும், இரண்டாவது இடம் பெற்ற மாணவி பார்கவிக்கு வெள்ளி பதக்கமும் மற்றும் ரூ.25ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்க ப்பட்டது. டில்லியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கிய விருந்தினராக கலந்துகொண்