சென்னை,ஜூலை 26- சர்வதேச நீரிழிவு சிகிச்சையில் அண்மைக் கால முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச மாநாடு சென்னையில் வெள்ளியன்று (ஜூலை 26) தொடங்கியது. டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் நடத்தும் இந்த மூன்று நாள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 3ஆயிரத்திற்கும் அதிக மான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். நீரிழிவு சிகிச்சை மற்றும் மேலாண்மை துறையில் புகழ் பெற்ற சர்வதேச மருத்துவர்கள், அறிவியலா ளர்கள் மற்றும் வல்லுனர்களின் சங்கமிக்கும் ஒரு நிகழ்வாக இந்த மாநாடு திகழ்கிறது. ஆசிய – இந்திய வளர்இளம் பருவ பெண்கள் மத்தியில் உடற்பருமன் மற்றும் நீரிழிவை தடுக்கும் முன் னெச்சரிக்கையாக உடல்சார் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் “தாண்டவ்’’ என்ற உடல்சார் நடனம் இந்த மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தொற்றா நோய்களை எதிர்த்துப் போரிடுவதற்கு தனித்துவமான நெறிமுறைகளை கொண்டதாக இந்திய நடன முறை உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் மோகன் கூறினார். இந்த மாநாட்டை சர்வதேச புகழ்பெற்ற மருத்துவர் ஆண்ட்ரு ஜே. போல்டன் தொடங்கிவைத்தார். பார்பரா டேவிஸ் மைய வயது வந்த நபர்களுக்கான நீரிழிவு சிகிச்சை திட்ட இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர். சதீஷ் கே. கார்க் மற்றும் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிசிசியன்ஸ் இந்திய கிளையின் நிர்வாகி டாக்டர் முருகநாதன், மாநாட்டு அமைப்புக் குழு உறுப்பி னர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா, டாக்டர் மோகன் குழும நீரிழிவு கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற வல்லுநர்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.