கடலூர், ஆக. 9- இந்திய பொருளாதா ரத்தில் முதுகெலும்பாய் திக ழும் பொதுத்துறையை காத்திட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கட லூரில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. 5 கோடி மூலதனத்தில் 1956இல் உருவாக்கப் பட்ட எல்.ஐ.சி இன்று 30 லட்சம் கோடிக்கு மேல் சொத்துள்ள நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திற்கும் பணத்தை கோடிக்கணக்கில் வாரிக் கொடுத்துள்ளது. தற்பொ ழுது ஒரு லட்சத்து 25 ஆயி ரம் கோடியை, நாட்டின் சாலை மேம்பாட்டுத் திட்டத் திற்காக 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு ரூ.25 ஆயி ரம் கோடி வீதம் 5 ஆண்டி ற்கு கொடுக்க உள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தை பொதுத்துறையாக பாது காக்கவும், பங்குகளை விற்கும் முயற்சியைக் கண்டித்தும் கடலூர் புதுப் பாளையத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க கூட்ட மைப்பின் துணை பொரு ளாளர் வி.ஜானகிராமன், கோட்ட இணைச் செயலா ளர்கள் வேலாயுதம் ஜி. வைத்தியலிங்கம், பொதுச் செயலாளர் எஸ்.ராமன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஹரி கிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.டி. சம்பந் தம், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் பால்கி, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஸ்ரீதரன், எல்ஐசி முதுநிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி பி.சம்பத், எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஆனந்தன், அனைத்து குடியிருப் போர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். மருதவாணன் ஆகியோர் பேசினர். வேலூர் கோட்ட துணைத் தலைவர் டி.மணவாளன் நன்றி கூறினார்.