tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்க்கு காப்பீட்டு ஊழியர்கள் ஆதரவு!

சாம்சங் தொழிலாளர்கள், தங்களின் தொழிற்சங்க உரிமைக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னைக் கோட்டம் 2- தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் சர்வ மங்களா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்  செயலாளர் ஆர்.கே. கோபிநாத், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை கோட்டை பொதுச் செயலாளர் எஸ். சந்தானம் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சாம்சங் தொழிலாளர் போராட்ட ஆதரவு நிதியாகவும் ரூ. 15 ஆயிரத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமாரிடம் வழங்கினர்.