tamilnadu

மூளைச்சாவு: வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர்: ஏப்.6- திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், தனியார் நகைக்கடன் நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2-ஆம் தேதி சிவா பைக்கில் ஆரணி-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிவா வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தார்.இதையடுத்து, அவரது உறவினர்கள் சிவாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்பேரில், கல்லீரல், ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனைக்கும், நுரையீரல் அப்பல்லோ மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;