tamilnadu

img

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மைப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மைப் பணிகள் ஆய்வு 

திருவண்ணாமலை, மே 13- சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை  மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.அதைத் தொடர்ந்து,திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் கிரிவலப்பாதை ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த 1200 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 260 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் உடனிருந்தனர்.