திருவள்ளூர், ஜன.4- தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் வெல்லத்தை வழங்க வேண்டும் என வெல்லம் உற்பத்தியா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொங்கல் செய்ய தேவையானது வெல்லம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள மரகத வல்லிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரு கிறது. தமிழர் திருநாளின் போது பொங்கல் செய்ய ஆதிகாலம் முதல் தற்போது வரை பொதுமக்கள் வெல்லத் தையே பயன்படுத்தி வருகின்றனர்.அதில் அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் முக்கியமான இடத்தினை வசிக்கிறது. ஆரம்ப காலத்தில் சர்க்கரை இல்லை. விவசாயிகளே கரும்புகளை பயிரிட்டு அதனை தங்களுடைய இல்லங்களிலேயே சாறு பிழிந்து பெரிய கொப்பரையில் பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் தயாரித்து வந்தனர். காலத்தின் மாற்றத்தால், சர்க்கரை ஆலைகளின் வரவால் கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் இந்த வெல்லம் தயாரிப்பு முறை பாரம்பரி யம் மாறாமல் வருகிறது. எனினும் குறைந்துவரும் வெல்ல உற்பத்திக் கூடங்களை பாதுகாக்க வேண்டும். திரு வள்ளூர் மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாதங்கள் கரும்பு விளைந்த உடன் கடைசி இரண்டு மாதங்களில் அறுவடை செய்து வெல்லம் தயாரிக் கின்றனர். ஆனால் நெற்பயிர் சாகுபடி அதிகரிப்பாலும் போதுமான ஆட்கள் பற்றாக்குறையினாலும் வெளிமாநிலங் களில் இருந்து வெல்லம் இறக்குமதி செய்கிறார்கள். போதுமான விலை கிடைக்காததால் கரும்பு சாகுபடி குறைந்து விட்டது. இது பற்றி ஆர்கே பேட்டை அருகில் உள்ள ஆனந்தவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.துளசிராமன் (வயது 40), கூறுகையில், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறோம். அரசு எங்களிடம் நேரடியாக வெல்லம் வாங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம், ஆனால் நேரடியாக எங்களிடம் ஏனோ வாங்குவதில்லை. ஒரு கிலோவுக்கு அரசின் விலை ரூ75 ஆனால் இடைத்தரகர்கள் எங்களிடம் வாங்குவது ரூ.40 மட்டும் தான். போது மான விலை கிடைக்காததால் எங்க ளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு வருட வெல்லம் சாகுபடி செய்வதற்கு குறைந்தது ஒரு யூனிட்டுக்கு 10 பேர் வேண்டும். இந்த தொழிலை நம்பி சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிலும், ரேஷன் கடைகளிலும், சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்க வேண்டும், அதனை எங்களிடம் நேரடியாக அரசு இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் எங்க ளுக்கு நல்ல விலை கிடைக்கும். மக்களு க்கும் கலப்படம் இல்லாத, தரமான வெல்லம் நேரடியாக சென்று சேரும். சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்குவது நம் பாரம்பரிய முறைப் படி மக்கள் பொங்கல் செய்ய பயன்படும். இப்படி கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் வெல்லத்தை கஷ்டம் இல்லாமல் இடைத்தரகர்கள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்வதாக மிகுந்த வேதனையுடன் அவர் கூறினார். மேலும் வரும் காலங்களிலாவது விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி யாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருப்பு விதைக்கு மானியம், வழங்க கோரிக்கை
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் தெரிவிக்கையில், 2013 ஆம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அன்றைய அதிமுக அரசு ரத்து செய்தது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்.கே.பேட்டையில் துவக்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியதின் எதிரொலியாக மீண்டும் இலவச மின்சாரம் பெறப்பட்டது.
கொள்முதல் நிலையம் அமைத்திடுக
வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு கரும்பு விதையை மானியத்தில் வழங்க வேண்டும், உற்பத்தி செய்த வெல்லத்தை விற்பனைக்காக கொண்டு செல்லும் போது காவல் துறையினரின் தொல்லையிலிருந்து வெல்லம் உற்பத்தியாளர்களை பாது காக்க வேண்டும், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்வதால் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க கொள்முதல் நிலையத்தை ஆர்.கே.பேட்டையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார். என்னத்தான் வெல்லம் இனித்தாலும், உற்பத்தியாளர்களின் வாழ்வு கசக்கத் தான் செய்கிறது. இனி இந்த புத்தாண்டி லிருந்தாவது இனிக்குமா?