சமையல் எரிவாயு விலையேற்றத்தை
கண்டித்து நூதன போராட்டம்
ன்றிய மோடி அரசின் சமையல் எரி வாயு உருளை விலையேற்றத்தை கண்டித்து காட்டுமன்னார்குடி பேருந்து நிலை யம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அடுப்பில் விறகு வைத்து சமைக்கும் நூதன போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், பிரகாஷ் வட்ட குழு உறுப்பி னர்கள் இளங்கோவன், மணிகண்டன், தன பால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், கிளைச் செய லாளர் நீலமேகன், காளிதாஸ், குமார், பழனிச்சாமி, சுபாஷ், ஆனந்தவீரன், மாதர் சங்க வட்டத் துணைத் தலைவர் வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மோடி தலைமையிலான ஒன்றிய அரசையும், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். கலசப்பாக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வட்டச் செயலாளர் பி. சுந்தர் தலைமையில், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர் அ.லட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ச.குமரன், கே.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஆ. திருமுருகன், டி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.