சென்னை,ஆக.7- சென்னையில் ஒரு தகவல் தொழில் நுட்ப நகரத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை புறநகரான மாதவரத்தில் இதற்காக 150 ஏக்கர் நிலம் அடை யாளம் காணப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நகரம் அமைப்ப தற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரி உள்ளது. இந்த நக ரத்தில் அலுவலக வசதி, குடியிருப்பு வசதி, வணிக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அருகில் அமைந்திருக்கும்.
இந்த மையத்தில் அதிநவீன கணினி வசதி, தரவுகளை சேமிக்கும் வசதி, தரவு மையமும் அமைய உள்ளது. மேலும், இந்த நகரத்தில் உலக தரத்திலான ஒரு மாநாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.