tamilnadu

img

மாவீரன் பகத்சிங் 117வது பிறந்தநாள்

மாவீரன் பகத்சிங் 117ஆவது பிறந்தநாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவொற்றியூர் எண்ணூர் பகுதி குழு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடசென்னை மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணதமிழன், பகுதி தலைவர் ஸ்டாலின், செயலாளர் இசக்கி, பொருளாளர் சேகுவேரா, நிர்வாகிகள் புவியரசி, விவேக், ராஜ்குமார், அச்சுதன், கலை, லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரன் பகத்சிங் பிறந்த தினமான சனிக்கிழமையன்று (செப்.28) வேளச்சேரி பகுதியில் 5 மையங்களில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, பொருளாளர் திவாகர், பகுதித் தலைவர் ராகேஷ், செயலாளர் குமரன், பொருளாளர் கௌதம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நாட்டின் சுதந்திரத்திற்காக 23 வயதில் தூக்கு மேடையை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங்கின் 117 வது பிறந்தநாள் விழா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடலூரில் கொண்டாடப்பட்டது.  பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் கலைவாணன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செங்கதிர், பரந்தாமன், பிரபு, குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  வி.சுப்பராயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கிரான்,  மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சௌமியா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆளவந்தார், கட்டுமான சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி,  கடலூர் மாநகர குழு உறுப்பினர்கள்  பூபதி, ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.