tamilnadu

img

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைகிறது சிகாகோவில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை, செப்.4- இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க சிகா கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை  ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோ வில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றுள்ளார். அங்கு இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க, சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

ரூ.200 கோடியில் புதிய ஒப்பந்தம் 

இதைத்தொடர்ந்து ஈட்டன் நிறுவனம்-தமிழக அரசு இடையே ரூ.200 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஈட்டன் நிறுவன ஆலை விரிவாக்கம், பொறியியல் மையம் நிறுவனம் அமைக்கவும்  இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொழில் முதலீட்டு - ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனிருந்தார்.