பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை'
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவை சனிக்கிழமையன்று (ஜூன் 14) சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்தியது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரிசுகளை வழங்கினார். மாநகர மேயர் ஆர்.பிரியா, நக்கீரன் கோபால், கல்வியாளர்கள் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, நித்யா செல்வகுமார், மன்ற தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.