வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றிக்கு பணியாற்றுவதற்காக காசிமேட்டில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் திறந்து வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் லட்சுமணன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.