tamilnadu

உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை, நவ.23- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் பதவி  யேற்றனர்.அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யாக இருந்த விவேக் குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகிய இருவரையும் சென்னை உயர் நீதி மன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் (நவ.23) நடந்த நிகழ்வில் இருவருக்கும் தலைமை  நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.