tamilnadu

img

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் சனியன்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கதர் பிஸ்மி, சிடர் பிஸ்னி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்தனர். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு  அரசு முன்வைத்த வலுவான வாதங்களால்  ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும், இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம்  நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்தனர்.. இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வளர்ச்சி ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்.