tamilnadu

தமிழ்நாட்டில் நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை!

சென்னை, ஏப்.13- மன்னார் வளைகுடா கட லில் தற்போது மீன்கள் இனப்  பெருக்கம் செய்யும் காலமாகும்.

இந்த காலகட்டத்தில் மீன வர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தால், மீன் வளம் குறைந்து விடும். இதனைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திரு வள்ளூர் வரையிலான கிழக்குக்  கடற்கரைப் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படும். அதே நேரத்தில், மீன்பிடித் தடைக் காலத்தைப் பயன்படுத்தி, மீன வர்கள் தங்களது விசைப்படகு களை பழுது பார்க்கும் பணி யில் ஈடுபடுவர். எனினும், வள்ளம், கட்டு மரம், பைபர் படகுகள் உள் ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதி யில் மீன் பிடிக்கச் செல்வர். மீன்பிடித் தடைக்காலம் இரு மாதமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இத னால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.