சென்னை,மார்ச் 13- வடசென்னையில் ரூ. 4181.03 கோடி மதிப்பீட்டில் 219 திட்டப்பணி களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினை யையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
வியாழனன்று (மார்ச் 14) தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 87 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எஞ்சி யுள்ள திட்டப் பணிகள் மூன்று ஆண்டு களில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில் உரை யாற்றிய முதலமைச்சர்,“ சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப் பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புக ளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச் சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தை ரூ. 1,000 கோடி செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்த உள்ளது என்றார்.
திட்டமிடப்பட்டுள்ள பணிகள்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமானது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்டங்களுக்கு ரூ. 440.62 கோடியும், ஏனைய துறைகளின் திட்டங்களுக்கு ரூ. 886.46 கோடியும் பங்களிக்கும்.
சம்பந்தப்பட்ட துறைகள், வாரியங் கள் மற்றும் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் வாயிலாக எஞ்சியுள்ள நிதிகள் அடுத்த இரண்டாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாதிரி பள்ளிகள்
வட சென்னையின் முக்கிய இடங்க ளில் மாதிரி பள்ளிகளை மேம்படுத்து தல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள், திறன் மேம்பாட்டு மையத்தை உரு வாக்குதல், புதிய பேருந்து முனையங் கள் மற்றும் பணி மனைகளை தரம் உயர்த்தப்படும்.
முக்கிய பகுதிகளில் துணை மின் நிலையங்களை நிறுவுதல், போதைப் பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் மூலம் பாதுகாப்பு பல ப்படுத்தப்படும்.
உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சைப் பிரிவு க்கான கட்டுமானப் பணி, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக் கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்தி கரிப்பு மையங்கள் போன்ற உட்கட்ட மைப்பு கட்டுமானங்களை மேம்படுத் தப்படும்.
விரிவாக்கப் பணிகள் விவரம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ரூ. 1034.24 கோடி யில் 16 திட்டப்பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ. 1071.44 கோடி மதிப்பீட்டில் 86 திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலமாக ரூ. 946.43 கோடியில் 49 திட்டப்பணிகள் மேற் கொள்ளப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ரூ. 287.84 கோடி செலவில் 23 திட்டப்பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 287.60 கோடியில் 4 திட்டப் பணிகள். கல்வித் துறையில் 57.43 கோடி மதிப்பீட்டில் 2 திட்டப்பணிகள், காவல் துறையில் 28.70 கோடியில் 6 திட்டப் பணிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 1 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ. 2.25 கோடியில் 3 திட்டப் பணிகள், மீன்வளத் துறை சார்பில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 1 திட்டப் பணி, என மொத்தம் ரூ. 4181.03 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணி கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம் வடசென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் வழிவகுக்கும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி. வி. கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மக்க ளவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.