tamilnadu

img

‘சென்னையில் மழை என்றதும் பதறும் காலம் மாறிவிட்டது’

சென்னை, நவ.4- சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம்  மாறிவிட்டது என்று  தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தாவது;-

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சிப்  பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகள் அதற்குக் காரணம்!

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைப்பது உள்ளிட்ட நமது அரசின் செயல் பாடுகள் கன மழையின் தாக்கம் மக்களை பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்க ளுக்கு கனமழை பெய் யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  அமைச்சர்கள், உள் ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர  மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனை வரும் களத்தில் மக்களுக்குத் துணை  நின்று பணியாற்றிட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.