tamilnadu

img

பட்டினி தாண்டவம் ஆடும் நாட்டில் 5 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா?

சென்னை, மார்ச் 24 - பசி, பட்டினி தாண்டம் ஆடும்  நாட்டில் 5 டிரில்லியன் பொருளா தாரம் சாத்தியமா? என்று திமுக பொருளாளரும், திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாள ருமான டி.ஆர்.பாலு கூறினார்.

இந்தியா கூட்டணியின் மதுர வாயல் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 24) வளசரவாக்கத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, “125 நாடுகளில் நடத்த ப்பட்ட கணக்கெடுப்பில் பட்டினிக் குறியீட்டில் 116 இடத்தில் இந்தியா உள்ளது. ஒவ்வொரு இரவிலும் 20 கோடி பேர், பட்டினியோடு உறங்குகின்றனர். பசியும், பட்டினி யும் தாண்டவமாடும் நாட்டில், 5 டிரில் லியன் பொருளாதாரத்தை உரு வாக்குவேன் என்று பிரதமர் கூறுவ தில் ஏதாவது நியாயம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

“2019 மக்களவைத் தேர்தலில் 37  விழுக்காடு வாக்குகளை பெற்ற  பாஜக அதிகாரத்தை கைப்பற் றியது. எஞ்சிய 63 விழுக்காடுகளை பெற்ற கட்சிகள் பிரிந்திருந்த நிலை மாறி, ஒன்று சேர்ந்து ஓரணியாக உள்ளன.  இந்தியா கூட்டணியின் வெற்றி தவிர்க்க இயலாது. 2018ல் இருந்து தமிழகத்தில் 9 கட்சி கூட்டணி தொடர் வெற்றிகளை ஈட்டி  வருகிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும்” என்றார்.

மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிடுகையில், “சேதுசமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு கொண்டு வந்தார். அந்த திட்டத்தை பாஜக தடுத்துவிட்டது. கத்திபாரா, மீனம்பாக்கம், மதுர வாயல் மேம்பாலம் என ஏராளமான பாலங்களை டி.ஆர்.பாலு கொண்டு வந்தார். 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக சாலை களை மேம்படுத்தினார். கூவம் ஆற்றில் இரண்டு மேம்பாலம் அமைக்கவும், மதுரவாயல் - துறை முகம் பறக்கும் மேம்பாலம் மீண்டும் வரவும் காரணமாக இருந்தவர் டி.ஆர்.பாலு” என்றார்.

“2019 மக்களவைத் தேர்தலில் டி.ஆர்.பாலு, 5 லட்சத்து 7  ஆயிரத்து 955 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 78 ஆயிரத்து 730 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்த வாக்கு வித்தியாசம் 1.50 லட்ச மாக மாற வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ (திமுக), க.பீம்ராவ், வி.தாமஸ் (சிபிஎம்), பா.கருணாநிதி (சிபிஐ), பாஸ்கர் (காங்கிரஸ்), ஞான முதல்வன் (விசிக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்  தலைவர்கள் பேசினர்.