tamilnadu

img

கிரையப் பத்திரம் எப்போது?

1990ம் வருடம் பிரதமர் ராஜீவ் காந்தி மறைமலை நகருக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களை கூறி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையோரம் வசித்த சுமார் 300 குடும்பங்களை சேலையூர் பாரத் நகரில் மறு குடியமர்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், ஒரு குடும்பத்திடம் இருந்து 220 ரூபாய் பெற்றுக் கொண்டது. மேலும்,  20 வருடங்களுக்கு மாதத்தவணை யாக 22 ரூபாய் செலுத்தும் வகையில் ஒதுக்கீடு கொடுத்தது. தாம்பரம் மாநகராட்சியின் 68வது  வட்டத்தில் வரும் இந்த பகுதியில் வசிக்கும் பாளையம் கூறுகையில், “ஒதுக்கீடு பெற்ற வர்கள் ஒரு சிலர் முழுத்தவணை தொகை யையும் செலுத்திவிட்டனர். மாற்றுத் திறனாளி ஒதுக்கீடு பெற்றவர்களும் பணம் செலுத்தி உள்ளனர், ஒரு சிலர் காலி இடங்களை வாங்கி குடியேறினர். தவணைத் தொகை செலுத்தியவர்களில் 20 பேருக்கு  மட்டும் பட்டா கொடுத்துள் ளனர். நீண்ட காலம் ஆகிவிட்ட தால் பலர் பணம் கட்டிய ரசீதுகளை தொலைத்துவிட்டனர். ஆகையால் பட்டா வழங்க மறுக்கின்றனர்” என்றார். “மக்கள் அனைவருமே குடிசைமாற்று வாரியத்திற்கு பணம் செலுத்தி  உள்ளனர். குடியிருப்போரிடம் ரசீது இல்லை என்பதற்காக பட்டா மறுக்க கூடாது. அரசு ஆவணங்களின்படி தவணை தொகை செலுத்தாமல் இருந்தால் அதனை பெற்றுக் கொண்டு பட்டா வழங்க வேண்டும். வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு கடிதம் பெற்றவர்களிடமிருந்து இடத்தை வாங்கியவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்” என்று அந்த பகுதியில் வசிக் கும் நாகராஜ் கோருகிறார்.