சென்னை, ஆக. 13 - தமிழகத்தில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகு திகளில் இடி, மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தரும புரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதி களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.