சென்னை,ஜன.1- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவ தும் கோடிக்கணக்கான தொழி லாளர்கள் உள்ளார்கள்.
இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறை யாக செயல்படுத்தவும் முறைகேடு களை தவிர்க்கும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட கால அவகாசம் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளா வது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாக கருதப்படு வார்கள். தற்போது கொண்டுவரப் பட்ட இந்த திட்டத்தின் படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்கள் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கை யில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர் கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன.
வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்து விட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டி ருக்கும். இதன் மூலம் தொழிலாளர் களுக்கு விரைவாக சம்பள பட்டு வாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்க ளின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவது தடுக்கப்படும்.
இன்று முதல் ஆதார் அட்டையை பணி யாளர் அட்டையுடன் இணைந் திருப்பதன் அடிப்படையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.