tamilnadu

img

இருளில் மூழ்கியது திருவலம் இரும்பு பாலம்

வேலூர், அக்.13- “80 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவலம் இரும்புப் பாலம் மின் விளக்கு வசதி இன்றி, இருளில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தை தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்” என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இரும்புப் பாலத்தினை கட்டும் பணிகள் 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1939 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு செப்டம்பர் மாதம்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தை அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரி திறந்து வைத்தார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவையும் - ஹவுரா நகரையும் இணைக்கும் வகையில் கடந்த 1938 ஆம் ஆண்டு கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளி நதியின் மீது கட்டப்பட்ட ஹவுரா இரும்புப் பாலம், திருவலம் இரும்புப் பாலத்தின் தொழில் நுட்பத்து டன், திருவலம் பாலத்தை கட்டிய தாராப்பூர் பொறியியல்  நிறுவன த்தால் கட்டப்பட்டது.

ஹவுரா பாலத்துக்கு முன்னோடியாக, திருவலம் இரும்புப் பாலம் திகழ்கிறது என்பது குறிப்பிட த்தக்கது .  வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்குட்பட்ட திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1939 -ஆம் ஆண்டு தமிழக - ஆந்திர மாநிலம் வழியாக வட மாநிலங்களை இணைக்கும் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பொன்னை ஆற்றை கடக்கும் வகையில் இரும்புப் பாலம்  அமைக்கப்பட்டது. இந்த இரும்புப் பாலப் பணிகள் ராபர்ட் எம்பர்சன் என்ற தலைமைப் பொறியாளரின் மேற்பார் வையில், சென்னையைச் சேர்ந்த ஜே.எச்.தாராப்பூர் பொறியியல் நிறுவனத்தின ரால் 1935-ஆம் ஆண்டு தொடங்க ப்பட்டது. இந்த இரும்புப் பாலம் 11 தூண்களுடன் கூடிய 500 மீட்டர் நீளத்தில் சுமார் 10,000 டன் இரும்புத் தளவாடங்களைப் பயன்படுத்தி 1,200 தொழிலாளர்களைக் கொண்டு ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டி ருந்த காலகட்டத்தில் ஆற்றின் நீரோட்டத்தை கணித்து துருப்பிடி க்காத சாய்வு வடிவ இரும்புத் தூண்களை கொண்டு பாதுகாப்பான முறையில் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

 அப்போது சென்னை மாநிலத்தி லேயே புதுமையான பாலமாக இந்த இரும்புப் பாலம் திகழ்ந்த தால், பல முன்னணி சினிமா நட்சத்தி ரங்கள் நடித்த திரைப்படங்களும்,தற்போதைய சினிமா நட்சத்திரங்களும் நடித்த பல திரைப்படங்கள் இந்தப் பாலத்தில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்முண்டியில் செயல்பட்டு வரும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்க ளும் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கும், சிப்காட் தொழில்பேட்டைக்கும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும் கெம்பராஜபுரம், சீக்கராஜபுரம் உள்ளிட்ட கிரா மப்புறத்தினரின் வாகனங்களும், திருவலம் பேருந்து நிறுத்தத்து க்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்று வருகின்றன.இந்தப் பழைய இரும்புப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு சில தூண்களில் ஏற்பட்ட விரிசல்களை சரி செய்து வெள்ளி வண்ணம் (மெட்டாலிக் பெயின்ட்) பூசப்பட்டு பராமரிக்க ப்பட்டது. இந்த இரும்புப் பாலத்துக்கு இதுவரை மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த இரும்புப் பாலத்துக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமை வாய்ந்த இந்த பாலத்தின் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக மணல் கொள்ளை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கனரக வாகனங்களாலும் பாலம் வலுவிழந்து பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். எனவே, மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில், பொன்னை ஆற்றுக்குறுக்கே இரும்புப் பால த்திற்கு அருகே, பாலம் கட்டப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.இதனால், சென்னை -மும்பை நெடுஞ்சாலை யில் போக்குவரத்து வாகனங்கள் சிறந்த முறையில்  சென்று  வரு கின்றன.