tamilnadu

img

இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை:
இளையராஜாவின் பாடல்களை அவ ருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே இசை நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இளை யராஜா தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விதித்த இடைக்காலத்தடையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளையராஜாவிடம் அனுமதி பெற்று இசைப்போட்டிகள், ஆன்லைன், ரேடி யோவில் அவருடைய பாடல்களைப் பயன்படுத்தலாம். இளையராஜாவின் பாடல் களை அவருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த 10 ஆண்டுகள் உரிமை உள்ளதாக அகி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.