அறநிலையத்துறை இல்லையென்றால் கோவில் சொத்துக்கள் களவாடப்படும்!
கோயில் தொழிலாளர்கள் யூனியன் தலைவர் பேட்டி
சென்னை, ஜூன் 28 – அறநிலையத்துறை இல்லையென்றால் கோவில் சொத்துக்கள் கள வாடப்படும் என்று தமிழ் நாடு திருக்கோயில் தொழி லாளர்கள் யூனியனின் மாநில அமைப்பாளர் பி.பழனியப்பன் கூறினார். சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக் கிழமையன்று (ஜூன் 28) சென்னையில் நடை பெற்றது. இதனையொட்டி பி.பழனியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று விலை வாசி உயர்வுக்கு ஏற்ப வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், அறநிலையத்துறை பணி யாளர்களுக்கு வழங்குவது போல், திருக்கோயில் பணியாளர்களுக்கும் மைய நிதி ஏற்படுத்தி ஊதியம் ஊதியம் வழங்க வேண்டும், செயல் அலுவலர் நிலை-4 காலி பணியிடங்களில் 25 விழுக்காட்டை உள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிட வேண்டும், சென்னை ஆணையர் அலுவலகத் திற்கு வரும் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும். 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்களில் பெரும் பகுதியினர் தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணி யாற்றுகின்றனர். அனைத்து திருக்கோயில் பணியாளர் களையும் அரசு ஊழியராக்கு வோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறி யது. அதனை நிறைவேற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை அறநிலையத் துறை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக அமைச் சரை சந்தித்து முறையீடு செய்வோம். இதனை தொடர்ந்து அமைச்சர் பங்கே ற்கும் வகையில்கோரிக்கை மாநாடு நடத்தப்படும். அப்போதும் கோரிக்கைகள் நிறைவேறாவிடில். முதல் நிலை திருக்கோயில் பணி யாளர்களையும் இணைத்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதி லளித்த அவர், இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் திருக்கோயில் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் களவாடப்படும் என்றார். சங்கத்தின் மாநில காப்பாளர் வி.கண்ணன், மாநித் தலைவர் ஜே.குமார் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சென்னை மகளிர் அணி செயலாளர் வி.பி.விஜய லட்சுமி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் க.இரமேஷ்குமார் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் த.சிட்டு வரவு செலவு அறிக்கையையும் சமர்பித் தார். மாநில செயல் தலைவர் மு.பக்கிரிசாமி, சிறப்புத் தலைவர் என்.இராஜா, மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளர் ஜி.தமிழ்ச்செல்வி, மாநில துணைத்தலைவர் எஸ்.தண சேகர், இணைச் செயலாளர் இரா.இரமேஷ், சென்னை மாவட்ட செயல் தலைவர் எஸ்.கீர்த்திவாசன், பொரு ளாளர் க.வெங்கடேசன், தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைமை நிலையச் செய லாளர் ஆர்.ரேணுகாதேவி, தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியா ளர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் ச.ருக்மணிப் பிரியா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட சென்னை தலைவர் வி.சிவ க்குமார்