வில்லிவாக்கம் பகுதி சீயாளம் தெருவில் மழை நீர் வடிகால் கால்வாயில் ஐசிஎப் நிர்வாகம் தடுப்பு சுவர் அமைத்ததால், தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாக்கடையாக மாறியுள்ளது. தடுப்பை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் மதியழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, மணிமேகலை, கோபாலகிருஷ்ணன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்