tamilnadu

img

பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக ஜூலை 7 அன்று உண்ணாநிலை

சென்னை:
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு செவ்வாயன்று சட்டப்பேரவையில்   பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடாததை கண்டித்து ஞாயிறன்று  (ஜூலை 7) அன்று தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.\

இதுகுறித்து அதன் ஒருங் கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் ஆகியோர் சென்னையில் செவ்வாயன்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சட்டமன்றத்தில் செவ்வாயன்று (ஜூலை2) நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை யில் ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகள் சார்ந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.  ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர் - அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறி விப்பாவது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம் அதிலும் எந்தவித அறிவிப்பும் இல்லை.

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட ஒன்பது அம்சக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும், வேலை  நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள், புனையப்பட்ட பொய் வழக்குகள் , பழிதீர்க்கும் பணியிட மாறுதல்களை ரத்து செய்து மறுக்கப்படும் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும், போராட்டத்தை வழி நடத்தியதற்காக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததை ரத்து செய்யவேண்டும், வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றதற்காக 28.01.2019ல் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டு இதுநாள் வரை மீளப் ணியமர்த்தப்படாமல் உள்ள கிருஷ்ணகிரி மீன்வள மேற்பார்வை யாளர் கா.சின்னசாமியை மீளப்பணியமர்த்திட வேண்டும், ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும் தலைமை யாசிரியருமான .ரவிச்சந்திரனின் தற்காலிகப் பணிநீக்கத்தினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாநிலை அறப்போரா ட்டம் நடைபெறுவதாக கூறினர்.மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட்ட த்தை ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

;