tamilnadu

img

கிருஷ்ணகிரியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் வீடுகள், மரங்கள் சேதம்

கிருஷ்ணகிரியில் திடீரென வீசிய  சூறாவளி காற்றால் வீடுகள், மரங்கள் சேதம்

கிருஷ்ணகிரி, மே.4- கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 85 மரங்கள் விழுந்தன, 25 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை யில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்,29 சிட்கோ வளாகத்தில் 4, ஜக்கப்பன் நகரில் 9, காந்தி நகரில் 6 மரங்களும், வேருடன் சாய்ந்த 4 மரங்கள் உட்பட 80 மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. 48 மணி நேரத்தில் முறிந்து விழுந்த மரங்கள்,விழும் நிலையில் இருந்த சில மரங்கள் அகற்றப்பட்டது. மரங்கள், கிளைகள் விழுந்தும், சூறைக்காற்றால் பிடுங்கி எறியப்படும் சுமார் 25 சீட்டு வீடுகள், கூரை வீடுகள்  சேதமடைந்துள்ளன. சில மின்கம்பங்கள்,ஒரு மின் கோபுரம் விழுந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு இயற்கை பேரிடர் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்,மின் கம்பங்களை உடனடியாக மாற்றி மின் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.