தமிழக வாலிபால் அணிக்கு ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
கிருஷ்ணகிரி, ஏப்.23 - தமிழக கைப்பந்து அணிக்கு ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் 18 வயதிற்கான கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2025 விளையாட்டுப் போட்டி மே 4 முதல் 15 ஆம் தேதி வரை பிகாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கால்பந்து,கூடைப்பந்து,கபடி, கைப்பந்து,கோக்கோ வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் தமிழக மகளிர் வாலிபால் அணிக்கான தோ்வு ஏப்.16 ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒசூரில் உள்ள தங்கவேலு வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஒசூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நவநீதா, தனலட்சுமி ஆகியோர் தமிழ்நாடு மகளிர் வாலிபால் அணிக்கு தேர்வாகியுள்ளனர். அதைத்தொடர்ந்து மாணவிகள் இருவரும் தோ்வு நடைபெற்ற இடத்திலேயே தமிழக அணியில் சோ்ந்து தற்போது பயிற்சி பெற்று வருகின்றனா். இந்த மாதம் இறுதியில் தேசிய கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக மகளிர் அணியினர் பிகார் செல்ல இருக்கின்றனர்.தமிழக அணியில் தோ்வு பெற்ற ஓசூர் வீராங்கனைகள் இருவரை யும் அவர்களின் பயிற்சியாளா் மாணிக்க வாசகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்