சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா கேட்டு திருத்தணியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், மே 16- காட்டுநாயக்கன் மக்க ளுக்கு பழங்குடி இன மக்களுக்கு (எஸ்.டி), சாதி சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (மே 16), திருத்தணியில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, கரிம்பேடு ஆகிய பகுதிகளில் பல தலைமுறைகளாக வசிக்கும் காட்டுநாயக்கன் மக்க ளுக்கு பழங்குடி இன (எஸ்.டி), சான்றிதழ் வழங்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும், நலவாரிய அட்டை வழங்க வேண்டும், மான்யத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.அய்யனார் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினருமான இரா.சரவணன், மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில குழு உறுப்பினர் பழனி, காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் தயாளன், மாவட்ட நிர்வாகி மணிகண்டன், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது, காட்டு நாயக்கன் பழங்குடி இன மக்கள் மகளிர் அணி மாநில தலைவர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்டிஓ கனி மொழி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார்.