tamilnadu

img

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: முதல்வர் புகழாரம்

சென்னை,ஜன.3- வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகி யோரின் பிறந்தநாளை யொட்டி முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வெளி யிட்டுள்ள செய்தியில், பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங் களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார்,

வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோ ரின் பிறந்தநாள். வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர் களின் படை பலத்தை எதிர்த்து, உயிரைவிட தன்மானமே பெரிது எனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்.  

1857 சிப்பாய்க் கலகத்தின் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.