வங்கதேச நாட்டில் கடந்த மாதம் அரசுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை யில் அந்நாட்டில் சிறுபான்மை யினராக வாழும் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்துத் துவா அமைப்புகள்,”இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வங்க தேச அணி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடக் கூடாது” எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தலை நகர் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு பாதுகாப்பை பலப்படுத்தி போராட் டத்தை நடத்தவிடாமல் தடுத்தது. இந்நிலையில், இந்தியா - வங்க தேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியினரை விளையாட விட மாட்டோம் என இந்துத்துவா அமைப்புகள் போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இரண்டா வது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூர் மைதானம் பலத்த பாது காப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.