tamilnadu

img

கலை வழியாக இதய நோய் விழிப்புணர்வு

கலைவழியாக இதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிறன்று (செப்,29)  நடைபெற்றது.  உலக இதய தினத்தையொட்டி தேனாம்பேட்டை டெக்காத்லான் வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற நிகழ்வை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவமனை நடத்தியது. இதற்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வ மிக்க இந்தப் போட்டியில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்  உற்சாகமாக பங்கேற்றனர். ஓவியப் போட்டியுடன், மாரடப் படைப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்ய ப்படும் உடனடி உதவி குறித்த பயிற்சி, மவுனமொழி நாடகம் உள்ளி ட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தி னராக கலந்துகொண்ட பிரபல ஓவியர் டிராஸ்கி மருது  “கலையின் மூலம், இதய ஆரோக்கியம் பற்றிய முக்கியமான தகவல்களை சமூகத் திற்கு கொண்டு செல்லமுடியும் என்றும், இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். காவேரி குழும மருத்துவ மனைகளின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர்  அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில் வாழ்க்கை முறையில் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, போதிய தூக்கமின்மை போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றார்.