சென்னை, ஜூலை 29- புதுவண்ணாரப்பேட்டையில் போதை ஊசி விற்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை பர்மா நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சிலர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணிகண்டன்(21), ஆனந்த் (22), முகமது ஆசிக் (27), ஜாவித் ஷெரீப் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அந்த 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.