தமிழகத்தில் இனி கள்ளச்சாராய பானைகள் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாயும் -இது அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்தில் கூறியது. அனால் உண்மை நிலை வேறாக இருந்தது. தமிழகத்தின் வீதி கள் எங்கும் கள்ளச்சாராயம் பெருக்கெ டுத்து ஓடிய காலம் அது. எங்கு திரும்பி னும் கள்ளச் சாராய கடைகள், அவற்றின் மூலம் ஏற்படும் சமூக விரோத செயல்கள், கள்ளச்சாராய வியாபாரிகளை எதிர்ப்ப வர்கள் மீதான வன் முறை வெறியாட்டங் கள் என எதையுமே கண்டுகொள்ளாமல் தமிழகத்தில் கள்ளச்சாராய வியாபாரமே நடக்கவில்லை என்று பேசியது காவல் துறை. இந்த சமூக விரோத செயல்களில் தினம் தினம் சொல்லொன்னா துயரங் களை அனுபவித்த அப்பாவி பொதுமக் களை பாதுகாத்திட தமிழகம் முழுவதும் போராட்டக் களம் கண்டது இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம்.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் இத்தகைய சமூக விரோத செயல்களும் சாராய விற்பனையும் அதிகம் நடை பெற்றது. இதனால் அந்த மாவட்ட மக்கள் அனுதினம் அனுபவித்த துயரங்கள் ஏரா ளம். எதிர்த்து கேட்க ஆளின்றி ஏகபோக மாய் நடந்தது. யாரேனும் அவர்களை எதிர்த்து கேட்டால், அடியாட்களைக் கொண்டு அவர்களை தாக்குவது என நீடித்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட எத்தகைய தியாகத்தை வேண்டு மானாலும் செய்து மக்களை காத்திட துணிந்து களத்தில் இறங்கினர் வாலிபர் சங்க தோழர்கள். அத்தகைய தியாக போராட்டத்தின் உச்சமாகத் தான் கள்ளச் சாராய ரவுடிகளின் வெட்டரிவாளுக்கு இளம் தோழர்கள் குமார்-ஆனந்தன் இரு வரும் களப்பலி ஆனார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை குப்பத்தில் ஒடுக்கப் பட்ட சமூகத்தை சார்ந்த மிகவும் ஏழ்மை யான குடும்பத்தில் 3 ஆண் பிள்ளைகளில் மூத்த பிள்ளையாக 1974 ஆம் ஆண்டு பிறந்தவன் குமார். பிழைப்புக்காக கட லூர் நகரத்திற்கு குடியேறி அங்கே குடிசை அமைத்து வாழ்ந்தது அவனது குடும்பம். அதே கடலூர் மாவட்டத்தில் சிப்காட் சங்கொலி குப்பத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1977ஆம் ஆண்டு பிறந்தவன் ஆனந்த். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஆனந்த் பள்ளி படிக்கும்போதே கிடைக் கின்ற வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய துயரநிலை ஏற்பட்டது.
சாகாவிலிருந்து சகாவாக...
இத்தகைய சூழ்நிலையில் இருவரும் வளர்ந்துவந்த நிலையில், 1994 ஆம் ஆண்டு மின்வாரியத்தில் வேலை பார்த்துவந்த தாமோதிரன் எனும் பொறியியல் பட்டதாரி யுடன் குமாருக்கு நட்புறவு ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் விளைவாக மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நடத்திய சாகா பயிற்சி வகுப்புகளுக்கு தாமோதிரனுடன் சேர்ந்து குமாரும் சென்று வந்தார். அப்பாவி இளைஞர்கள் மனதில் மதவெறி விஷத்தை ஏற்றி, அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்த வைக்கும் ஆர்.எஸ்.எஸ் -ன் சதி வலையில் தாமோதிர னும் குமாரும் முதலில் சிக்கிக்கொண்டா லும், பின்பு அவர்களின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கண்டறிந்து அந்த அமைப்பின் மீது கடும் கோபமும் வெறுப் பும் கொண்டனர். இந்நிலையில் தாமோதிரனுக்கு நெய் வேலி என்.எல்.சி யில் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றியபோது இந்திய தொழிற்சங்க மையத்தில் பணியாற்றிய தும், 1995 ஆம் ஆண்டு கடலூரில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் பேரணியை பார்த்ததும் தாமோதரனை இடதுசாரி இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொள்ள வைத்தது.
பின்னர் தன்னை வாலிபர் சங்கத்தில் இணைத்துக்கொண்டார். சமகாலத்தில் கடலூர் சுப்பிரமணியன் கோவில் தெரு வில் வான்மயில் நற்பணி மன்றம் இயங்கி வந்தது. அந்த மன்றத்தின் செயலாளராக குமார் இருந்தார். தங்கள் தெருவின் தேவைகளை பூர்த்தி செய்ய சமூக சேவை களை செய்து வந்த அந்த மன்றம் மெல்ல மெல்ல வாலிபர் சங்கத்தின் நோக்கங்க ளாலும், லட்சியங்களாலும் ஈர்க்கப்பட்டு, அந்த மன்றத்தில் இருந்தோர் தங்களை வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட வாலிபர் சங்க கிளைக்கு தலைவராக தாமோதிரனும், செயலாளராக குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர் களுடன் துடிப்பான இளைஞனாக ஆனந்த னும் இணைந்து அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டனர்.
கள்ளச்சாராய எதிர்ப்பில்....
தங்கள் போராட்டங்களின் நீட்சியாக கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டக் களத்தில் உறுதியுடன் நின்றது வாலிபர் சங்கம். வாலிபர் சங்கத்தின் போராட்டங்க ளால் இனியும் கள்ளச்சாராய வியா பாரத்தை நடத்த முடியாது என அறிந்து கொண்ட சக்திவேல், நாகராஜ் தலை மையிலான சாராய ரவுடி கும்பல் வாலிபர் சங்க தோழர்களிடம் கெஞ்சி பார்த்தது, மிரட்டிப் பார்த்தது. எதற்கும் தோழர்கள் அசைந்து கொடுக்காத நிலையில் வாலி பர் சங்கத்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டது. முதலில் வாலிபர் சங்கத் தலைவர் கனக ராஜை பட்டப்பகலில் மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியது அந்த ரவுடி கும்பல். ஆனால் தோழர் கனகராஜ் வெட்டு காயங்க ளுடன் உயிர்தப்பிவிட்டார். அதன் பின்னர் தான் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறி யது. 1999 ஜூன் 25 அன்று மாலை முதல் புதுப்பாளையம் பகுதியில் அசாதாரன மான சூழல் நிலவியது. அடையாளம் தெரி யாத ரவுடிகள் சிலர் ஆயுதங்களுடன் திரிய ஆரம்பித்தனர். அன்று இரவு இருட்டிய பின்பு நள்ளிரவில் தோழர்கள் குமார் ஆனந்தன் இருவரது வீடுகளிலும் புகுந்து அவர்களை வெட்டி வீழ்த்துகிறது அந்த கொலைவெறி கும்பல். 26 இடங்களில் வெட்டுபட்டு ஆனந்தின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துவிட, உயிருக்கு போராடும் நிலையில் கடலூர் கிருஷ்ணா மருத்துவமணையில் சக தோழர்க ளின் கண்முன்னே தோழர் குமாரின் உயிரும் பிரிந்துவிடுகிறது. போலீஸ் தேர்வில் தேர்வாகி இன்னும் சில தினங்களில் காவ லராக பதவியேற்று மக்களுக்கு சேவை செய்திட காத்துக்கிடந்தவனின் உடல் தற்போது அதே மக்களுக்காக போராடிய தால் வெட்டி வீழ்த்தப்பட்டு தரையில் கிடக்கி றது. அந்தோ! உலக போதை எதிர்ப்பு தினத்தன்றே போதைக்கு எதிராக போராடியதால் எம் தோழர்கள் வெட்டி வீழ்த்ப்பட்டனர்.
சீரானம்பாளையம் பழனிச்சாமி துவங்கி கடலூர் குமார், ஆனந்தன் என தற்போது சாதி வெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட அன்புத் தோழன் அசோக் வரை மக்களுக்கான போராட்டக் களத்தில் வாலிபர் சங்கம் செய்துள்ள தியா கங்கள் ஏராளம் ஏராளம்… குறிப்பாக கள்ளச் சாராயத்திற்கு எதிராக மட்டும் விருதுநகர் சந்துரு, கோவில்பட்டி அமல்ராஜ், கட லூர் குமார், ஆனந்தன் என 4 தோழர்களை களப்பலி கொடுத்துள்ள இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். எனவே தான் சொல்கின்றோம்… “தியாகத்தின் அடையா ளம் நாங்கள்”. நீங்கள் ஒருபோதும் சாகவில்லை தோழர்களே… இதோ! டாஸ்மாக் கடை களுக்கு எதிராக, போதை கலாச்சாரத் திற்கு எதிராக தமிழகத்தின் வீதிகளெங்கும் எம் வாலிபர் சங்கத் தோழர்கள் நடத்தும் போராட்டங்களில் நீங்கள் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்…
(ஜூன் 26, 2019 தோழர்கள் குமார்-ஆனந்தனின் 20-வது நினைவு தினம்)
-க.வி.ஸ்ரீபத்
மாவட்டச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
விழுப்புரம் தெற்கு.