tamilnadu

img

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனாவுக்கு பலி...  

சென்னை 
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக 2 ஆண்டு காலம் பணியாற்றி வருகிறார். 

இவருக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலயில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் 10 நாட்கள் உடல்நிலை மோசமாக இருந்ததால் சாமிநாதனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மேலும் மோசமடைய சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ள சாமிநாதனுக்கு மனைவி மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;