சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டில், ‘நான் முதல் வன்’ திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக் கப்படுகின்றன.
அந்த வகையில், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய துறைகளில் ஒரு வார பயிற்சிக்கு தமிழ்நாட்டிலி ருந்து 25 மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.
கடந்த வாரம் பயிற்சிக்காக லண்டன் சென்ற மாணவர்கள் பயிற்சி முடிந்து திங்களன்று (ஜூன் 17) அதிகாலை சென்னை திரும்பி னர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் முதல் வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வாழ்த்துப் பெற்றனர்.
அப்போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலை மைச் செயலாளர் நா.முருகானந் தம், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்ன சென்ட் திவ்யா, பிரிட்டிஷ் கவுன்சிலின் இயக்குநர் ஜனக புஷ்பநாதன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.