சென்னை,பிப்.12- சட்டப்பேரவையின் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித் துள்ளார் ஆளுநர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப் பதாவது:-
சட்டப்பேரவை கூட்டத்தில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் நாட்டுப்பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டு களாக பின்பற்றி வரும் நல் மரபா கும். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை, வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டது, நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ரவி: கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி பதவி ஏற்கும் முன் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அவர் இரண்டு வகையில் மரபுகளையும், சட்டங்க ளையும் மீறி அதீதமாக சட்டப்பேரவை யில் நடந்து கொண்டிருக்கிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, அப்பதவி வகிக்க, சற்றும் தகுதியவற்றவராகவே தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
திட்டமிட்ட சதி : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசிய கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளி யேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக் கோரியது திட்டமிட்ட சதியாகும்” என்று கூறியுள் ளார்.
ஆளுநரை வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன்
திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக் கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போல செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற தமிழ்நாடு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், “வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர் கள் தான் ஆளுங்கட்சியை விமர்சித்து வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் ஒரு புதிய மரபாக தமிழ்நாட்டின் ஆளு நர் ஆர்.என். ரவி இரண்டாவது முறை வெளிநடப்பு செய்திருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் சபையின் மரபை மீறிய செயலா கும்” என்றார்.